பாடல் பதிவேற்றம் : DHAYA
ஆண் : ஆயிரம் ஜன்னல் வீடு…
இது அன்பு வாழும் கூடு…
ஆலமரத்து விழுது…
இதன் ஆணி வேரு யாரு…
ஆண் : அடை காக்கிற கோழியப் போலவே…
இந்த கூட்டைக் காப்பது யாருங்க…
அழகான அம்மன போலவே…
எங்க அம்மு குட்டிய பாருங்க…
ஆண் : ஏய் சுத்துறான் சுத்துறான்…
காதுலதான் சுத்துறான்…
வீசுறான் வீசுறான்…
வலையத்தானே வீசுறான்…
ஆண் : பாசமான புலிங்க கூட…
பத்துநாள் தூங்கலாம்…
பாசமுள்ள இந்த வீட்டில்…
படிக்கட்டா மாறலாம்…
குழு : ஆயிரம் ஜன்னல் வீடு…
இது அன்பு வாழும் கூடு…
ஆலமரத்து விழுது…
இதன் ஆணி வேரு யாரு…
ஆண் : வீரபாண்டித் தேரப் போல…
எங்க வீரமணிய பாரு பாரு…
வீரமான வம்சத்தாளு…
இவங்களப் போல் யாரு…
ஆண் : எழிலோட பேச்சைக் கேட்டு ...
மொத்த குடும்பமும் ட்ரெயினு ஓட்டும்...
கயலோட அன்பை பார்த்து…
மொத்த குடும்பம் அடங்கும்…
ஆண் : கோழி வெரட்ட வைரக்கம்மல்…
கழட்டித்தானே எறிவாங்க…
திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட…
கழுத்துச் செயின அவுப்பாங்க…
ஆண் : காட்டுறான் காட்டுறான்…
கலர்படம் காட்டுறான்…
நீட்டுறான் நீட்டுறான்…
வாய ரொம்ப நீட்டுறான்…
ஆண் : சொந்த பந்தம் கூட இருந்தா…
நெருப்புல நடக்கலாம்…
குழு : கதிர் அண்ணன் மனசுவச்சா…
கவிதையே போடாம இருக்கலாம்...
குழு : ஆயிரம் ஜன்னல் வீடு…
இது அன்பு வாழும் கூடு…
ஆண் : எங்கள் சொந்தம் பார்த்தாலே…
சொர்க்கம் சொக்கி போகுமே…
எங்கள் வீட்டில் பூத்தாலே…
பூவின் ஆயுள் கூடுமே…
பெண் : ஆ ஹா ஹா ஆ…
ஆ ஆ ஆ ஆ…
ஆண் : இரண்டு கண்கள் என்றாலும்…
பார்வை என்றும் ஒன்றுதான்…
உருவத்திலே தனித்தனிதான்…
உள்ளம் என்றும் ஒன்றுதான்…
ஆண் : ஒரு சேவல்தான் அடைகாத்தது…
இந்த அதிசயம் பாருங்கள்…
அண்ணனை வாழ்த்துங்கள்…
பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…
பெண்: ஆ ஹா ஹா…
ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…
பெண்: ஆ ஹா ஹா…
பெண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே…
இது ஆனந்த பூந்தோட்டம்…
அன்பின் ஆலயம்…
ஆண் & பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…
பெண் : ஆ ஹா ஹா…
ஆண் & பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…
பெண் : ஆ ஹா ஹா…
ஆண் : நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே…
நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும்…
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை…
நாங்கள் இங்கு அழித்திடுவோமே…
பெண் : வந்து வந்து மோதும்…
சின்ன சின்ன சோகம் எல்லாம்…
ஒன்று சேர்ந்து நாங்கள்…
ஊதும் போது ஓடிப்போகும்…
ஆண் : எங்களுக்குள் நாங்கள்…
செல்ல பேரை வைத்துக்கொண்டு…
செல்லமாக நாளும்…
சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு…
பெண் : அள்ளி அள்ளி அன்பை தந்து…
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்…
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ…
குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…
ஆண் : ஹே ஹே ஹே… அழகான சின்ன தேவதை…
அவள்தானே எங்கள் புன்னகை…
நாள் தோறும் இங்கு பண்டிகை…
நம் வானில் வான வேடிக்கை…
ஆண் : இது போல சொந்தம் தந்ததால்…
இறைவா வா நன்றி சொல்கிறோம்…
பெண் : உனக்கேதும் சோகம் தோன்றினால்…
இங்கே வா இன்பம் தருகிறோம்…
குழு : சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்…
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்…
பாடல் பதிவேற்றம் : DHAYA