logo

Nandri Solla Unakku(Short Ver.)

logo
الكلمات
பெ: நன்றி சொல்ல உனக்கு

வார்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்..

காலமுள்ள வரைக்கும்

காலடியில் கிடக்க

நான்தான் விரும்புறேன்..

நெடுங்காலம் நான் புரிஞ்ச..

தவத்தால நீ கிடைச்சே

பசும்பொன்ன பித்தளையா

தவறாக நான் நெனச்சேன்

நேரில் வந்த ஆண்டவனே….

ஆ: ஊரறிய உனக்கு

மாலையிட்ட பிறகு

ஏன்மா சஞ்சலம்...

உன்னுடைய மனசும்

என்னுடைய மனசும்

ஒன்றாய் சங்கமம்...

பெ: செவ்விளநி நான் குடிக்க

சீவியதை நீ கொடுக்க

சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்..

ஆ: கள்ளிருக்கும் தாமரையே

கையணைக்கும் வான்பிறையே

உள்ளிருக்கும் நாடியெங்கும்

உந்தன் உயிர்தான்..

பெ: இனிவரும் எந்தப் பிறவியிலும்

உனைச் சேர காத்திருப்பேன்

ஆ: விழிமூடும் இமை போல

விலகாமல் வாழ்ந்திருப்பேன்..

பெ: உன்னப் போல தீபமில்ல

உள்ளம் போல கோவில் இல்ல

தினந்தோறும் அர்ச்சனைதான்

எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு

வார்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

ஆ: ஆ…..உன்னுடைய மனசும்

என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்..