கத்தும் கடல் உள்ளே ஒரு
முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ..ஒஒ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
மிச்சப்பூ ஒவ்வொன்றும் என்னானதோ..ஒஒ
மொத்தத்தில் கன்னிப்பூ என்றானதோ
கத்தும் கடல் உள்ளே ஒரு
முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்..
திரைப்படம்
கட்டுமரக்காரன்
இசை
இசைஞானி
பாடியவர்கள்
மனோ எஸ் ஜானகி
பாடல் பதிவு
பாடல் suggestion
Thanks a lot dear frnd
ஆண்மகன் யாரோ.. அந்தி இளமாலை
ஆழ்கடல் நீர்மேல்.. ஆடிவரும் வேளை
மீன்வலை வீச.. மெல்ல அதன்மீது
நான் விழுந்தேனோ.. என்னை அறியாது
எங்கேயோ பாதை மாறி இங்கே உன் வாசல்தேடி
வந்தேனே வாடும் தோகை நான்
என்னென்று நானும் சொல்ல
என் உள்ளம் துள்ளும் மெல்ல
இங்கே நான் வாழும் நாட்களில்தான்
நெஞ்செல்லாம் ஏதோ.. அலைபாயும் நாளோ..
அம்மாடி இன்பம் என்ன கண்டேன் இங்கே நான்
கத்தும் கடல் உள்ளே ஒரு
முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ..ஒஒ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
கத்தும் கடல் உள்ளே ஒரு
முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்..
கம்மிங்ல ஓவர்லாப் வரும்
கவனமா பாடுங்க
ஆ அ..ஆ..ஆ
ஆ ஹ..ஹா.ஹ
பெ அ..ஆ..ஆ
பெ ஹ..ஹா.ஹ
ஆ அ..ஆஆ..ஆஆ
பெ ஆஆ..ஆஆ
ஆ அ..ஆஆ..ஆ..ஆ..ஆஆ
பெ ஆஆ..ஆ..ஆ..ஆஆ
மீன்விழ நானும்.. கன்னிவலை வீச
மான்விழ பார்த்தேன்.. கண்ணிரெண்டும் கூச
பூ நகை மாது.. பொங்கும் கடல் மேலே
மேனகை போலே.. மெல்ல எழுந்தாலே
எல்லாம் என் யோகம் என்பேன்..
பொன்னான நேரம் என்பேன்..
சிற்பத்தை வீட்டில்.. சேர்த்தேன் நான்
யாருக்கு சொந்தமென்று
யார் சொல்ல கூடும் இன்று
என்றாலும் காவல் காப்பவன் நான்
கண்ணீரில்லாமல் கரைசேர்ப்பேன் நானும்
என்னோடு தங்கும்போது துன்பம் ஏதம்மா
கத்தும் கடல் உள்ளே ஒரு
முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்
அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ..ஒஒ
அம்மம்மோய் அல்லிப்பூ கண்ணானதோ
மிச்சப்பூ ஒவ்வொன்றும் என்னானதோ..ஒஒ
மொத்தத்தில் கன்னிப்பூ என்றானதோ
நன்றி வணக்கம்