ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே.. ஆவலே..
இதழ் சொல்ல துடிக்கின்றதே.. காதலே…
ஆண் : கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா..
பழனிவேல் நடராஜன்
பெண் : குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
ஆண் : மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
பெண் : ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
ஆண் : வானம் காணாத வெண்ணிலவொன்று
மோக பாலூட்டுதே
பெண் : நாணம் பொய் நீட்டுதே….. ஹே ஹே.
ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா….
ஆண் : தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
ஆண் : உயிரில் இறங்கி வரவா
ஆண் : உன் உடலில் கரைந்து விடவா
பெண் : உறக்கம் திறக்கும் திருடா
பெண் : என் கனவில் பதுங்கி இருடா
ஆண் : புடவையாய் மாறி பொன் உடல் மூடி
உன்னுடன் வாழவா
பெண் : இருவரின் ஆடை இமைகளே ஆக
இரவை நாம் ஆளவா
ஆண் : வேர்வை குடை தேடவா
ஆ ஹா ஹா ஹா ஹா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
பெண் : இதயமே தெரியுமா உனக்காகவே நானடா
ஆண் : இமை மூட மறுக்கின்றதே
குழு : காதலே
ஆண் & பெண் : இதழ் சொல்ல துடிக்கின்றதே
குழு : காதலே