படம் : கோழி கூவுது
பாடியவர்கள் : கிருஷ்ணசந்திரன், ஜானகி
இசை : இளையராஜா
பெ: ஏதோ.. மோகம் ..
ஏதோ ... தாகம்..
நேத்து வரை.. நினைக்கலையே..
ஆசை விதை ... முளைக்கலையே..
சேதி என்ன ..
வனக்கிளியே..
ஆ: ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன
வனக்கிளியே ..
பெ: ஏதோ மோகம் ஏதோ தாகம்..
விலைக்கு வாங்கப்பட்ட
இப்பாடலை பதிவிறக்குவதும்,
மீள்பதிவேற்றம் செய்வதும்
கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!
பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!
பெ: தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு
தோளச்சுட்டு காயமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு
தோளச்சுட்டு காயமாச்சு
ஆ: பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு..
பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு..
போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே
பெ: ஏதோ..மோகம்..
ஏதோ ..தாகம்..
ஆ: நேத்து வரை.. நினைக்கலையே..
ஆசை விதை.. முளைக்கலையே..
பெ: சேதி என்ன
வனக்கிளியே..
விலைக்கு வாங்கப்பட்ட
ஆ: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பாத்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பாத்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
பெ: அக்கம் பக்கம் சுத்தி பாத்து
தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்தி பாத்து
தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச்சொல்லி கோழி கூவுது
இந்த வேளையில் நெஞ்சு தாவுது
ஆ: ஏதோ.. மோகம் ..
ஏதோ ... தாகம்..
நேத்து வரை.. நினைக்கலையே..
ஆசை விதை ... முளைக்கலையே..
சேதி என்ன ..
வனக்கிளியே..
பெ: ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன
வனக்கிளியே..
ஆ: வனக்கிளியே..
பெ: வனக்கிளியே..