ஒனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகலிரவா
ஒனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகலிரவா
ஒனக்கு வாக்கபட்டு வருசங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்
என் உச்சி முத பாதம் வரை
என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலதான் நிக்கும் அந்த
முத்தாலம்மன் சாட்சி
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன எழுதி
ஒருவாட்டி என ஓரசாட்டி உன
உறுத்தும் பஞ்சன மெத்தையும்
ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில
கருவாட்டு பான கெடச்சாக்கா பூன
விடுமா சொல்லடி சுந்தரி
நெத்திலி வத்தலு வீசுற வாடயில
பூவாட்டம் ஒக்காந்து மாவாட்டும் நேரந்தான்
முன்கைய நீட்டாத முந்தான ஓரந்தான்
பூவாடை தூக்காதா பூவாடும் காக்காதா
நீ முத்தி போன கத்திரியா
புத்தம் புது பிஞ்சு
நான் முந்தாநாளு ஆளானதா
எண்ணுது உன் நெஞ்சு
ஒனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகலிரவா
ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சுல பச்சையா குத்தி வெச்சேன்
இது தாண்டி ரதம்
இதுல தான் நெதம் உனதான் ஒக்காரவெச்சு நான்
ராசாதி ராசனா ஊர்கோலம் வந்திடுவேன்
ஒன்னோட நான் சேர தின்னேனே மண் சோறு
நேந்து தான் சாமிக்கு வப்பேனே வெள்ளாடு
ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்
நான் காத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால் எழும் நாளும்
நீ மாலையிடும் வேளை எது
கேக்குது என் தோளும்
ஒனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகலிரவா
ஒனக்கு மாலையிட்டு வருசங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்