menu-iconlogo
logo

ChandrodayamOru pennanadho

logo
লিরিক্স
சந்திரோதயம்

ஒரு பெண்ணானதோ

செந்தாமரை

இரு கண்ணானதோ

சந்திரோதயம்

ஒரு பெண்ணானதோ

செந்தாமரை

இரு கண்ணானதோ

பொன்னோவியம்

என்று பேரானதோ

என் வாசல் வழியாக

வலம் வந்ததோ

சந்திரோதயம்

ஒரு பெண்ணானதோ

செந்தாமரை

இரு கண்ணானதோ

குளிர் காற்று

கிள்ளாத

மலரல்லவோ

கிளி வந்து

கொத்தாத

கனியல்லவோ

குளிர் காற்று

கிள்ளாத

மலரல்லவோ

கிளி வந்து

கொத்தாத

கனியல்லவோ

நிழல் மேகம்

தழுவாத

நிலவல்லவோ

நெஞ்சோடு நீ சேர்த்த

பொருளல்லவோ

எந்நாளும்

பிரியாத

உறவல்லவோ

இளம் சூரியன்

உந்தன் வடிவானதோ

செவ்வானமே

உந்தன் நிறமானதோ

பொன் மாளிகை

உந்தன் மனமானதோ

என் காதல் உயிர் வாழ

இடம் தந்ததோ

இளம் சூரியன்

உந்தன் வடிவானதோ

செவ்வானமே

உந்தன் நிறமானதோ

ஆ...

ஆ...

ஆ...

ஆ...

முத்தாரம்

சிரிக்கின்ற

சிரிப்பல்லவோ

முழு நெஞ்சைத்

தொடுகின்ற

நெருப்பல்லவோ

முத்தாரம்

சிரிக்கின்ற

சிரிப்பல்லவோ

முழு நெஞ்சைத்

தொடுகின்ற

நெருப்பல்லவோ

சங்கீதம்

பொழிகின்ற

மொழியல்லவோ

சந்தோஷம்

வருகின்ற

வழியல்லவோ

என் கோயில்

குடி கொண்ட

சிலையல்லவோ

சந்திரோதயம்

ஒரு பெண்ணானதோ

செந்தாமரை

இரு கண்ணானதோ

அலையோடு

பிறவாத

கடல் இல்லையே

நிழலோடு நடக்காத

உடல் இல்லையே

துடிக்காத

இமையோடு

விழியில்லையே

துணையோடு

சேராத

இனமில்லையே

என் மேனி

உனதன்றி

எனதில்லையே

எழிலோடு

எழில் சேர்த்து

இமை மூடவோ

எனக்கென்று

சுகம் வாங்க

துணை தேடவோ

மலர் மேனி

தனை கண்டு

மகிழ்ந்தாடவோ

மணக்கின்ற

தமிழ் மண்ணில்

விளையாடவோ

கண் ஜாடை

கவி சொல்ல

இசை பாடவோ

இளம் சூரியன்

உந்தன்

வடிவானதோ

செவ்வானமே

உந்தன்

நிறமானதோ

சந்திரோதயம்

ஒரு பெண்ணானதோ

செந்தாமரை

இரு கண்ணானதோ

ஆ...