பாடகா் : சங்கர் மகாதேவன் 
இசையமைப்பாளா் : வித்யாசாகர் 
ஆண் : தாலாட்டும் காற்றே வா.......... 
தலை கோதும் விரலே வா......... 
@ 
தொலை தூர நிலவே வா 
தொட வேண்டும் வானே வா 
ஆண் : உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் 
என் ஜென்மம் வீணென்று போவேனோ 
உன் வண்ண திருமேனி சேராமல் 
என் வயது பாழ் என்று ஆவேனோ 
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் 
என் ஆவி சிறிதாகி போவேனோ........... 
ஆண் : என்னுயிரே.... நீ தானோ......... 
என்னுயிரே... நீ தானோ..... 
@ 
ஆண் : தாலாட்டும் காற்றே வா.............. 
தலை கோதும் விரலே வா.......... 
தொலை தூர நிலவே வா.......... 
தொட வேண்டும் வானே வா........ 
பாடகா் : சங்கர் மகாதேவன் 
இசையமைப்பாளா் : வித்யாசாகர் 
ஆண் : கண்ணுக்குள் கண் வைத்து 
கண் இமையால் கண் தடவி 
சின்னதொரு சிங்காரம் 
செய்யாமல் போவேனோ...... 
@ 
ஆண் : பேச்சிழந்த வேளையிலே 
பெண் அழகு என் மார்பில் 
மூச்சு விடும் ரசனையை 
முகராமால் போவேனோ.... 
@ 
ஆண் : உன் கட்டு கூந்தல் காட்டில் 
நுழையாமல் போவேனோ 
அதில் கள்ள தேனை கொஞ்சம் 
வருகாமல் போவேனோ 
ஆண் : நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை 
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ 
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை 
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ 
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் 
அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ 
என்னுயிரே..... நீ தானோ... 
என்னுயிரே.... நீ தானோ..... 
ஆண் : தாலாட்டும் காற்றே வா....... 
தலை கோதும் விரலே வா....... 
பாடகா் : சங்கர் மகாதேவன் 
இசையமைப்பாளா் : வித்யாசாகர் 
ஆண் : ஒரு நாள் ஒரு பொழுது 
உன் மடியில் நான் இருந்து 
திருநாள் காணாமல் 
செத்தொளிந்து போவேனோ........ 
@ 
ஆண் : தலையெல்லாம் பூக்கள் பூத்து 
தள்ளாடும் மரமேறி 
இலையெல்லாம் உன் பேரை 
எழுதாமல் போவேனோ... 
@ 
ஆண் : உன் பாதம் வாங்கி நெஞ்சில் 
பதியாமல் போவேனோ 
உன் கண்ணீர் எச்சில் ருசியை 
அறியாமல் போவேனோ 
ஆண் : உன் உடலை உயிர் விட்டு போனாலும் 
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ 
உன் உடலை உயிர் விட்டு போனாலும் 
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ 
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி 
நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ..... 
என் உரிமை.... நீ தானோ...... 
என் உரிமை.... நீ தானோ..... 
@ 
ஆண் : தாலாட்டும் காற்றே வா...... 
தலை கோதும் விரலே வா....... 
தொலை தூர நிலவே வா...... 
தொட வேண்டும் வானே வா...... 
ஆண் : உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் 
என் ஜென்மம் வீணென்று போவேனோ 
உன் வண்ண திருமேனி சேராமல் 
என் வயது பாழ் என்று ஆவேனோ 
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் 
என் ஆவி சிறிதாகி போவேனோ 
ஆண் : என்னுயிரே..... நீ தானோ...... 
என்னுயிரே....... நீ தானோ.... 
நீ தானோ....................