menu-iconlogo
logo

Aarariraro

logo
Liedtext
ஆராரிராரோ

நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து

ஆராரிராரோ

நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே

தாயின் பாதம் சொர்க்கமே

வேதம் நான்கும் சொன்னதே

அதை நான் அறிவேனே

அம்மா என்னும் மந்திரமே

அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆராரிராரோ

நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து

வேர் இல்லாத மரம்போல் என்னை

நீ பூமியில் நட்டாயே

ஊர் கண் எந்தன் மேலே பட்டால்

உன் உயிர் நோக துடித்தாயே

உலகத்தின் பந்தங்கள் எல்லாம்

நீ சொல்லி தந்தாயே

பிறப்புக்கும் இறப்பபுக்கும் இடையில்

வழி நடத்தி சென்றாயே

உனக்கே ஓர் தொட்டில் கட்டி

நானே தாயாய் மாறிட வேண்டும்

ஆராரிராரோ

நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்

நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா

மண் பொன் மேலே ஆசை துறந்த

கண் தூங்காத உயிர் அல்லவா

காலத்தின் கணக்குகளில்

செலவாகும் வரவும் நீ

சுழல்கின்ற பூமியின் மேலே

சுழலாத பூமியும் நீ

இறைவா நீ ஆணையிடு

தாயே நீ எந்தன் மகளாய் மாற

ஆராரிராரோ

நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து

Aarariraro von K.J. Yesudas - Songtext & Covers