F:ஆனிபொன் தேர் கொண்டு
மாணிக்க சிலையென்று
வந்தாய் நின்றாய் இங்கே
காணிக்கை பொருள் ஆகும்
காதல் என் உயிர் ஆகும்
நெஞ்சை தந்தேன் அங்கே
M:அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்
F:அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்
M:வான் உலகம் என்னும்
மாளிகையில் மின்னும்
பூ மகளின் கன்னம்
தேன் நிலவின் வண்ணம்
வான் உலகம் என்னும்
மாளிகையில் மின்னும்
பூ மகளின் கன்னம்
தேன் நிலவின் வண்ணம்
F:நீல விழி பந்தல்
நீ இருக்கும் மேடை
கோலம் இடும் ஆசை
தூது விடும் ஜாடை
F:நீல விழி பந்தல்
நீ இருக்கும் மேடை
கோலம் இடும் ஆசை
தூது விடும் ஜாடை
இளமையில் இனியது சுகம்
இதை பெறுவதில் பல வித ரகம்
இந்த அனுபவம் தனி ஒரு விதம்
மலரும் வளரும் பல நாள் தொடரும்
M:அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்
F:பாலில் விழும் பழம் எனும்
போதை பெறும் இளம் மனம்
மெல்ல தான் அள்ளி கொள்ள தான்
M:காதல் நிலா முகம் முகம்
கண்ணில் உலா வரும் வரும்
காதல் நிலா முகம் முகம்
கண்ணில் உலா வரும் வரும்
மெல்ல தான் நெஞ்சை கிள்ள தான்
F:கொடி இடை விளைவது கனி
இந்த கனி இடை விளைவது சுவை
அந்த சுவை பெற நமக்கென்ன குறை
நெருக்கம் கொடுக்கும் நிலை தான் மயக்கம்
M :அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்
M:பாவை உன்னை நினைக்கையில்
பாடல் பெரும் கவி குயில்
பக்கம் வா இன்னும் பக்கம் வா
F:கோவை இதழ் இதோ இதோ
கொஞ்சும் கிளி அதோ அதோ
கோவை இதழ் இதோ இதோ
ொஞ்சும் கிளி அதோ அதோ
இன்னும் நான் சொல்ல
இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்
M:மழை தரும் முகில் என குழல்
நல்ல இசை தரும் குழல் என குரல்
உயிர் சிலை என உலவிடும் உடல்
நினைத்தேன் அணைத்தேன்
மலர் போல் பறித்தேன்
F:அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்