menu-iconlogo
huatong
huatong
t-m-soundararajanlreswari-ondru-engal-jathiye-cover-image

Ondru engal jathiye

T. M. Soundararajan/L.R.Eswarihuatong
adkoadkohuatong
Liedtext
Aufnahmen
வணக்கம் நல்வரவு

பாடல்

ஒன்று எங்கள் ஜாதியே

படம்

பணக்கார குடும்பம்

இசை

விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலாசிரியர்

கண்ணதாசன்

பாடகர்

ரி.எம். சௌந்தரராஜன்

பாடகி

எல்.ஆர். ஈஸ்வரி

நாயகன்

எம்.ஜி. ஆர்

நாயகி

சரோஜாதேவி

️ இசை ️

ஒன்று எங்கள் ஜாதியே

ஒன்று எங்கள் நீதியே

ஒன்று எங்கள் ஜாதியே

ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும்

ஒருவர் பெற்ற மக்களே

உழைக்கும் மக்கள் யாவரும்

ஒருவர் பெற்ற மக்களே

தமிழில் தருவது

பதிவேற்றம்

️ இசை ️

வெள்ளை மனிதன் வேர்வையும்

கருப்பு மனிதன் கண்ணீரும்

வெள்ளை மனிதன் வேர்வையும்

கருப்பு மனிதன் கண்ணீரும்

உப்பு நீரின் வடிவிலே

ஒன்று சேரும் கடலிலே

உப்பு நீரின் வடிவிலே

ஒன்று சேரும் கடலிலே

ஒன்று எங்கள் ஜாதியே

ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும்

ஒருவர் பெற்ற மக்களே

உழைக்கும் மக்கள் யாவரும்

ஒருவர் பெற்ற மக்களே

️ இசை ️

ஆதி மனிதன் கல்லை எடுத்து

வேட்டையாடினான்

அடுத்த மனிதன் காட்டை அழித்து

நாட்டை காட்டினான்

மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து

பொன்னை தேடினான்

ஆதி மனிதன் கல்லை எடுத்து

வேட்டையாடினான்

அடுத்த மனிதன் காட்டை அழித்து

நாட்டை காட்டினான்

மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து

பொன்னை தேடினான்

நேற்று மனிதன் வானில் தனது

தேரை ஓட்டினான் (ஆண்: ஆஹா)

இன்று மனிதன் வெண்ணிலாவில்

இடத்தை தேடினான் (ஆண்: ம்ஹும்)

நேற்று மனிதன் வானில் தனது

தேரை ஓட்டினான்

இன்று மனிதன் வெண்ணிலாவில்

இடத்தை தேடினான்

வரும் நாளை மனிதன் ஏழு உலகை

ஆள போகிறான்

வரும் நாளை மனிதன் ஏழு உலகை

ஆள போகிறான்

ஒன்று எங்கள் ஜாதியே

ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும்

ஒருவர் பெற்ற மக்களே

உழைக்கும் மக்கள் யாவரும்

ஒருவர் பெற்ற மக்களே

️ இசை ️

அரிய அழகிய பாடல்களை

தரமான ஓலிப்பதிவுடன்

பதிவேற்றம் செய்கின்றோம்

எங்கள் அனைத்து பாடல்களையும்

எளிதாக தமிழ்கீதம்

என்ற ஒரே சொல்லில்

songல் தேடுங்கள்

புதிய பதிவேற்றங்களை

உடனுக்குடன் பெற்றுக் கொள்ள

எங்களுடன் இணையுங்கள்

நாங்கள் சிறந்த ஒலிப் பேழைகள்

மட்டுமே பதிவேற்றம் செய்கிறோம்

மன்னராட்சி காத்து நின்ற தெங்கள் கைகளே

மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே

எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே

மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே

எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே

கல்லில் வீடு

கட்டித் தந்த தெங்கள் கைகளே

கருணை தீபம்

ஏற்றி வைத்த தெங்கள் நெஞ்சமே

கல்லில் வீடு

கட்டித் தந்த தெங்கள் கைகளே

கருணை தீபம்

ஏற்றி வைத்த தெங்கள் நெஞ்சமே

இல்லை என்பதில்லை நாங்கள்

வாழும் நாட்டிலே

இல்லை என்பதில்லை நாங்கள்

வாழும் நாட்டிலே

ஆ,,ஆ,,ஆ ,ஆ

அஹஹா அஹஹா

லலரா,, லலரா,,

ஆ,,ஆ,,ஆ ,ஆ

ஒன்று எங்கள் ஜாதியே

ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும்

ஒருவர் பெற்ற மக்களே

உழைக்கும் மக்கள் யாவரும்

ஒருவர் பெற்ற மக்களே

Mehr von T. M. Soundararajan/L.R.Eswari

Alle sehenlogo