பாடகி : உமா ரமணன்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
ஆண் : நீ பாதி
நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
ஆண் : நீ பாதி நான் பாதி
கண்ணே
பெண் : அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
ஆண் :நீயில்லையே
இனி நானில்லையே
உயிர் நீயே……
பெண் : நீ பாதி நான் பாதி
கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
பெண் : வானப்பறவை
வாழ நினைத்தால்
வாசல் திறக்கும்
வேடந்தாங்கல்
ஆண் : கானப்பறவை
பாட நினைத்தால்
கையில் விழுந்த
பருவப்பாடல்
பெண் : மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு
அர்த்தமிருக்கும் உன்னாலே
ஆண் : மெல்ல சிரிக்கும்
உன் முத்துநகை ரத்தினத்தை
அள்ளித்தெளிக்கும் முன்னாலே
பெண் : மெய்யானது
உயிர் மெய்யாகவே
தடையேது
ஆண் : நீ பாதி நான் பாதி
கண்ணே
பெண் : அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி
கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
ஆண் : இடது விழியில்
தூசி விழுந்தால்
வலது விழியும்
கலங்கி விடுமே
பெண் : இருட்டில் கூட
இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும்
தொடர்ந்து வருவேன்
ஆண் : சொர்கம் எதற்கு
என் பொன்னுலகம்
பெண்ணுருவில்
பக்கம் இருக்கு
கண்ணே வா
பெண் : இந்த மனம்தான்
என் மன்னவனும் வந்துலவும்
நந்தவனம் தான்
அன்பே வா
ஆண் : சுமையானது
ஒரு சுகமானது
சுவை நீ தான்
பெண் : நீ பாதி நான் பாதி
கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
நீயில்லையே
இனி நானில்லையே
உயிர் நீயே
பெண் : நீ பாதி
நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே