menu-iconlogo
logo

Nee Paathi Nan Paathi

logo
Lyrics
பாடகி : உமா ரமணன்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

ஆண் : நீ பாதி

நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

ஆண் : நீ பாதி நான் பாதி

கண்ணே

பெண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

ஆண் :நீயில்லையே

இனி நானில்லையே

உயிர் நீயே……

பெண் : நீ பாதி நான் பாதி

கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

பெண் : வானப்பறவை

வாழ நினைத்தால்

வாசல் திறக்கும்

வேடந்தாங்கல்

ஆண் : கானப்பறவை

பாட நினைத்தால்

கையில் விழுந்த

பருவப்பாடல்

பெண் : மஞ்சள் மணக்கும்

என் நெற்றி வைத்த

பொட்டுக்கொரு

அர்த்தமிருக்கும் உன்னாலே

ஆண் : மெல்ல சிரிக்கும்

உன் முத்துநகை ரத்தினத்தை

அள்ளித்தெளிக்கும் முன்னாலே

பெண் : மெய்யானது

உயிர் மெய்யாகவே

தடையேது

ஆண் : நீ பாதி நான் பாதி

கண்ணே

பெண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

நீ பாதி நான் பாதி

கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

ஆண் : இடது விழியில்

தூசி விழுந்தால்

வலது விழியும்

கலங்கி விடுமே

பெண் : இருட்டில் கூட

இருக்கும் நிழல் நான்

இறுதி வரைக்கும்

தொடர்ந்து வருவேன்

ஆண் : சொர்கம் எதற்கு

என் பொன்னுலகம்

பெண்ணுருவில்

பக்கம் இருக்கு

கண்ணே வா

பெண் : இந்த மனம்தான்

என் மன்னவனும் வந்துலவும்

நந்தவனம் தான்

அன்பே வா

ஆண் : சுமையானது

ஒரு சுகமானது

சுவை நீ தான்

பெண் : நீ பாதி நான் பாதி

கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

நீயில்லையே

இனி நானில்லையே

உயிர் நீயே

பெண் : நீ பாதி

நான் பாதி கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே