menu-iconlogo
logo

Kanne Kalaimane (Short Ver.)

logo
avatar
K. J. Yesudaslogo
outterbridgekendralogo
Sing in App
Lyrics
நல்வரவு

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு

பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது

பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ

ஓராரிரோ

ராரிராரோ

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான்

கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன்

என்னாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி

நீதானே என் சன்னிதி

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ

ஓராரிரோ

ராரிராரோ

ஓராரிரோ

ராரிராரோ

ஓராரிரோ

ராரிராரோ

ஓராரிரோ...

Kanne Kalaimane (Short Ver.) by K. J. Yesudas - Lyrics & Covers