பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்
பெண் : உயிரல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி.......................
ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : ம்ம்ம்ம்....புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
பெண் : கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஆண் : ஒரு வானம் வரைய
நீல வண்ணம்
நம் காதல் வரைய
என்ன வண்ணம்
பெண் : என் வெட்கத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா…
ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
ஆண் : உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண் : பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண் : ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
பெண் : நீ வரையத்தெரிந்த
ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த
ஒரு நளிந்த கலைஞன்
ஆண் : மேகத்தை ஏமாற்றி
மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா…
ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்(பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்
பெண் : உயிரல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்