பெண் : உன்ன விட்டு நான் இருந்தால்
அந்தி வரும் சந்திரனும் சுடுமோ
மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ
ஆண் : வெண்ணிலவ தூது விடு
வண்ண மயில் உன் அருகில் வருவேன்
பள்ளியறை பாடல்களை பாடிடுவேன்
பெண் : என்னை கொடுப்பேன் கொண்டு போ
உந்தன் கையோடு
ஆண் : ஒட்டி இருப்பேன் ஆடை போல்
உந்தன் மெய்யோடு
பெண் : தன்னந்தனிச்சிருக்க
உன்னை நினைச்சிருக்க
பனி விழும் இரவினில்
உதடுகள் வெடிக்கிது
ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்
பெண் : மேற்கால வெயில் சாய
வாய்க்காலில் வெள்ளம் பாய
ஆண் : மயக்கம் ஒரு கெறக்கம்
இந்த வயசுல மனசுல
வந்து வந்து பொறக்கும்
பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்