menu-iconlogo
logo

Kaaththiruntha Kangale

logo
Lyrics
காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா

கதைகள் சொல்லும் பெண்ணிலா

கண்ணிரண்டில் வெண்ணிலா

கதைகள் சொல்லும் பெண்ணிலா

நானிருந்தும் நீயிலா

வாழ்வில் ஏது தேனிலா

கண்ணிரண்டில் வெண்ணிலா

கதைகள் சொல்லும் பெண்ணிலா

நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

மைவிழி வாசல் திறந்ததிலே

ஒரு மன்னவன் நுழைந்ததென்ன

அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே

புன்னகை விளைந்ததென்ன

மைவிழி வாசல் திறந்ததிலே

ஒரு மன்னவன் நுழைந்ததென்ன

அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே

புன்னகை விளைந்ததென்ன

பொழுதொரு கனவை விழிகளிலே

கொண்டு வருகின்ற வயதல்லவோ..

பொழுதொரு கனவை விழிகளிலே

கொண்டு வருகின்ற வயதல்லவோ..

ஒரு தலைவனை அழைத்து

தனியிடம் பார்த்து

தருகின்ற மனதல்லவோ..

தருகின்ற மனதல்லவோ

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்த

பூமுகம் சிவந்ததென்ன

இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே

வையகம் இருண்டதென்ன

செவ்விதழோரம் தேனெடுக்க

இந்த நாடகம் நடிப்பதென்ன

என்னை அருகினில் அழைத்து

இரு கரம் அணைத்து

மயக்கத்தை கொடுப்பதென்ன

மயக்கத்தை கொடுப்பதென்ன

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

லா.. ல..லால்லா..லால்லல்லா……..

Kaaththiruntha Kangale by P. B. Sreenivas/P. Susheela - Lyrics & Covers