menu-iconlogo
logo

Innisai Paadivarum

logo
Lyrics

இன்னிசை பாடி வரும் இளங்

காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில்

உள்ளம் கொள்ளை போகுதே

ஆனால் காற்றின் முகவரி

கண்கள் அறிவதில்லையே

இந்த வாழ்க்கையே ஒரு

தேடல் தான் அதை தேடி தேடி

தேடும் மனசு தொலைகிறதே

இன்னிசை பாடி வரும் இளங்

காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை

கண் இல்லையென்றாலும்

நிறம் பார்க்க முடியாது

நிறம் பார்க்கும் உன் கண்ணை

நீ பார்க்க முடியாது

குயிலிசை போதுமே அட

குயில் முகம் தேவையா

உணர்வுகள் போதுமே

அதன் உருவம் தேவையா

கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்

கற்பனை தீர்ந்து விடும்

கண்ணில் தோன்றா காட்சி

என்றால் கற்பனை வளர்ந்து விடும்

ஆடல் போல தேடல் ஒரு சுகமே

இன்னிசை பாடி வரும் இளங்

காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாண்டொலி கேட்பதில்லை

உயிர் ஒன்று இல்லாமல்

உடல் இங்கு கிடையாது

உயிர் என்ன பொருள் என்று

அலை பாய்ந்து திரியாதே

வாழ்க்கையின் வேர்களோ

மிக ரகசியமானது

ரகசியம் காண்பதே

மிக அவசியமானது

தேடல் உள்ள உயிர்களுக்கே

தினமும் பசியிருக்கும்

தேடல் என்பது உள்ளவரை

வாழ்வில் ருசி இருக்கும்

ஆடல் போல தேடல் ஒரு சுகமே

இன்னிசை பாடி வரும் இளங்

காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில்

உள்ளம் கொள்ளை போகுதே

ஆனால் காற்றின் முகவரி

கண்கள் அறிவதில்லையே

இந்த வாழ்க்கை ஒரு தேடல்

தான் அதை தேடி தேடி தேடும்

மனசு தொலைகிறதே....

இன்னிசை பாடி வரும் இளங்

காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை.