சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ..
பெண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ...
சஹானா சாரல் தூவுதோ...
ஆண் : என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
அடடா அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ
பெண் : கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ...
ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது.....
நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் வாழுமிது.....
பெண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ....
சஹானா சாரல் தூவுதோ....
பெண் : தலைமுதல் கால்வரை
தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற
மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
ஆண் : பூமிக்கும் வானுக்கும்
விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா...
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
பூக்களின் சாலையில்
பூவுன்னை ஏந்தியே
வானுக்குள் நடக்கட்டுமா ஹோ..
ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது ஹோ..
நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் வாழுமிது....
பெண் : ஓராயிரம் ஆண்டுகளாய்
சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் வாழுமிது.....
ஆண் : சஹானா சாரல்
தூவுதோ...
பெண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ....
ஆண் : என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
இருவரும் : அடடா.....
ஆண் : அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ
பெண் : கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ...
ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது...
நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் வாழுமிது...
பெண் : சஹானா
ஆண் : சாரல் தூவுதோ...
பெண் : ஹோ ஓ..ஓ...ஓ
ஆண் : சஹாரா பூக்கள் பூத்ததோ
பெண் : ஓ..ஓ....ஓஹோ...ஓ..ஓ..ஹோ