F :நதியோரம் ம்ம்ம்ம்
நதியோரம் நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல.
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்..
M:நதியோரம் ம்ம்ம்ம்.
நதியோரம் நீயும் ஒரு
நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்
F:வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை
மூடுவதென்ன
முகில்தானோ துகில்தானோ
முகில்தானோ துகில்தானோ
சந்தனக்காடிருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா
நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம்என் சொல்ல
M:நதியோரம் ம்ம்ம்ம்
நதியோரம் ம்ம்.
M:தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
F:நதியோரம் ம்ம்ம்ம்
நதியோரம் ம்ம்.
M:நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
F:நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
BOTH:நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல