ஆ: பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை கண்ணே
உள்ளத்தில் ஓசையில்லை
ஊமைக்கு பாஷையில்லை
கண்மணியே மெளனம்தானே தொல்லை ஹா..
பெ: நீயா என்னை நேசித்தாய்
பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்
ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மையை வெல்ல வேண்டும்
ஆ: தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது
பெ: ஓஹோ (ஆ: ஆ) ஆஹா (ஆ: ஆ) உண்மைதானா
ஆ: ஏழு ஜென்மம் போனாலும்
இந்த பந்தம் போகாது
பெ: நீயா (ஆ: ஆ) சொன்னாய் (ஆ: ஆ)
மெய்யே தானா
ஆ: உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது
பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது
ஆ..
ஆ: பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
பெ: உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்
பெ: காதலுக்கு எப்போதும்
வார்த்தை மட்டும் போதாது
ஆ: கண்ணே உந்தன் எண்ணம் என்ன
பெ: கண்ணடித்தால் தீராது
காதல் இங்கு வாராது
ஆ: என்னை தந்தேன் இன்னும் என்ன
பெ: பெண்மை என்றால்
வீரனுக்கே மாலை தந்துவிடும்
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்
ஓ...
ஆ: பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்
பெ: ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்