ஆ: ஆஹா ஆ ஆ ...
ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
ஆ: கையில் தீபம் இருந்தும் நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
பெ: கண்ணை தந்து உன்னை நான்
அன்னை போல காப்பேன்
ஆ: வாழ்க்கை என்னும்
பள்ளியில் என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா
பெ: விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்
ஆ: மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்
பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
ஆ: தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
ஆ: என்னை தந்தேனே
பெ: முத்தம் போடும் வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை
ஆ: பூக்கள் பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை
பெ: காம பாணம் பாய்வதால் காயமாகுமே
காம பாணம் பாய்வதால் காயமாகுமே
ஆ: கலசம் இன்று கவசமாகும்
காமன் அம்பு முறிந்துபோகும்
பெ: மலர்ந்த தேகம் சிவந்து போகும்
ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
பெ: தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
இருவரும்: என்னை தந்தேனே.........