படம் : கண்ணில் தெரியும் கதைகள்
பாடல் : வாலி
இசை : சங்கர் கணேஷ்
பாடியவர் : பாலசுப்ரமணியம்,ஜிக்கி
,வாணிஜெயராம்
ஆ:நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்மை யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு..
அது மாயம் என்றாச்சு
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
ஆ: நீரு நெலம் வானம் எல்லாம் நீயாச்சு
நிறம் கெட்டு இப்போ வெட்டவெளி ஆயாச்சு
நித்தம் நித்தம் பூத்தாயே
நான் பறிச்ச ரோசாவே..
இனிமே எப்போ வரும் பூவாசம்
செல்லம்மா என்னம்மா சொல்லம்மா
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
பெ: அப்போ வந்து வாங்கி தந்தே பூச்சேலே
நீ எப்போ வந்து போடப்போற பூமாலே
அம்மன் சிலை இங்கேதான்
ஆடித்தேரு இங்கேதான்
இருந்தா கோயில் குளம் ஏனைய்யா
செல்லையா என்னையா சொல்லையா…
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
பெ: மாடு மனை எல்லாம் உண்டு என்னோட
என் நெஞ்ச மட்டும் போக விட்டேன் உன்னோட
உன்னை தொட்டு நான் வாரேன்
என்னை விட்டு ஏன் போறே
நிழல் போல் கூட வந்தா ஆகாதோ
செல்லையா என்னையா சொல்லையா…
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
ஒன்னாலே நெஞ்சு புண்ணாச்சு
ஆ:நான் உன்ன நெனச்சேன்
பெ: நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
ஆ:நம்மை யாரு பிரிச்சா
பெ:ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஆ:ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு
பெ: நீ இல்லாமத்தானே
அது மாயம் என்றாச்சு..
ஆ:அது மாயம் என்றாச்சு..
ஆ.:நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு