ஆ: இதழில் கதையெழுதும் நேரமிது
இதழில் கதையெழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ..ஆ...ஆ...
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆ..ஆ...ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
ஆ: இளமயழகை அள்ளி அணைப்பதற்கே
இளமயழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது தனிமையில்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதையெழுதும் நேரமிது
ஆ: காதல் கிளிகள் ரெண்டு
ஜாடை பேசக்கண்டு ஏதேதோ
எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
பெ: நானும் நீயும் சேர்ந்து
ராகம் பாடும் போது நீரோடை
போலே என் நெஞ்சம் இனிக்கும்
ஆ: இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது
பெ: நானுமெழுதிட இளமையும் துடிக்குது
நாணமதை வந்து இடையினில் தடுக்குது
ஆ: ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
பெ: காலம் வரும்வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்கரம் தழுவிடுமே
ஆ: காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
பெ: மாலை மணமாலையிடும்
வேளைதனில் தேகம் இது
விருந்துகள் படைத்திடும்
ஆ: இதழில் கதையெழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ..ஆ...ஆ...
பெ: மனதில் சுகம்மலரும் மாலையிது
ஆ: தோகை போலே மின்னும்
பூவை உந்தன் கூந்தல் கார்மேகம்
என்றே நான் சொல்வேன் கண்ணே
பெ: பாவை எந்தன் கூந்தல்
வாசம் யாவும் அந்த மேகம் தனிலேது
நீ சொல்வாய் கண்ணா
ஆ: அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்தப் பூ முகம் அந்தியில்
வந்திடும் சுந்தர நிலவோ
பெ: நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
ஆ: மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
பெ: காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
ஆ: மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
பெ: மோகம் நெருப்பாக
அதைத் தீர்க்கும் ஒரு ஜீவநதி
அருகினில் இருக்குது
மனதில் சுகம்மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆ..ஆ...ஆ...
ஆ: இதழில் கதையெழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ..ஆ...ஆ...
இதழில் கதையெழுதும் நேரமிது