F : பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள் தீண்ட மட்டும்
அவசியம் புரியாது
M : காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
F : இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அவிழாது
இதயப்பூ எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது
M : ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
உன் எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
F : கைகள் தொடாமல் கண்களால்
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
M : மலரே ஒருவார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
M : காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
M : அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா
M: மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று