ஆண்: அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நே.....ரம் என்னென்னவோ
பெண்: அவனே.... என் காதலன்
அவனே.... என் காதலன்
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நே.....ரம் என்னென்னவோ......
பெண்: தாலாட்டும் பிள்ளை ஒன்று
சேலாட்டம் பெண்ணைக்கண்டு
வாலாட்டும் எண்ணம் என்ன
இலையோ…மலரோ…கனியோ....
ஆண்: பால் வாசம் சிந்தும் சின்ன
பாப்பாவின் உள்ளம் இன்று
பூவாசம் கொண்டதென்ன
அதுவோ…இதுவோ…எதுவோ
ஆண்: அவளே என் காதலி
பெண்: நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
ஆண் : தொட்டாலும் ஒட்டிக்கொள்ளும்
பட்டான வெள்ளிக்கன்னம்
எட்டாமல் செய்வதென்ன
இனமோ…குலமோ…பயமோ
பெண்: பேராசை வெள்ளம் வந்து
போராடும் போதும் பெண்கள்
தாய்வீடு தந்த செல்வம்
அச்சம்…நாணம்…வெட்கம்
பெண்: அவனே என் காதலன்
ஆண்: கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ