menu-iconlogo
logo

Vaadikkai Maranthathum

logo
Letras
ஆ: வாடிக்கை மறந்ததும் ஏனோ

என்னை வாட்டிட ஆசை தானோ

பலகோடி மலர் அழகை மூடி வைத்து

மனதைக் கொள்ளையடிப்பதும் ஏனோ

வாடிக்கை மறந்ததும் ஏனோ,

பெ: வாடிக்கை மறந்திடுவேனோ

என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ

புதுமங்கை எந்தன் மனதில் பொங்கி வரும்

நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ

வாடிக்கை மறந்திடுவேனோ

பெ: அ..ஆ..ஆ..

இருவரும்: அ..ஆ...ஆ..ஆ..

ஆ: அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்

அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்,

அமுத விருந்தும் மறந்து போனால்

உலகம் வாழ்வதும் ஏது,

பல உயிர்கள் மகிழவதும் ஏது,

நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பமெனும்

உணர்வை தனித்துப் பெற முடியாது,

பெ: ஓ..ஓ..ஓ..

அந்தி நேரம் போனதால் ஆசை

மறந்தே போகுமா,

அந்தி நேரம் போனதால் ஆசை

மறந்தே போகுமா,

அன்புக் கரங்கள் சேரும் போது

வம்பு வார்த்தைகள் ஏனோ,

இன்ப வேகம் தானோ,

பெ: வாடிக்கை மறந்திடுவேனோ என்னை

வாட்டிடும் கேள்விகள் ஏனோ

புதுமங்கை எந்தன் மனதில் பொங்கி வரும்

நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ,

பெ: அ..ஆ..ஆ..

இருவரும்: அ..ஆ..ஆ..ஆ....ஆ....

ஆ: காந்தமோ இது கண்ணொளி தானோ

காதல் நதியில் நீந்திடும் மீனோ,

கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ

கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ,

பெ: பொறுமை இழந்திடலாமோ

பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ,

நான் கருங்கல்லு சிலையோ

காதலெனக்கில்லையோ

வரம்பு மீறுதல் முறையோ,

இருவரும்: சைக்கிள் ஓட மண் மேலே

இரு சககரம் சுழல்வது போலே,

அணை தாண்டி வரும் சுகமும்

தூண்டிவிடும் முகமும்

சேர்ந்ததே உறவாலே

இருவரும்: அ..ஆ..ஆ..ஆ....ஓ..ஓ..ஓ..

Vaadikkai Maranthathum de A. M. Rajah/P. Susheela - Letras y Covers