பெ: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இசை
சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா
இன்பம் தன்னை தூண்டுதா
அன்புகொள்ள காலம் நேரம் ஏது
அன்புகொள்ள காலம் நேரம் ஏது
ஆ: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
பாடியவர்கள்: மனோ, சித்ரா
இசை: இளையராஜா
இது ஒரு CeylonRadio வெளியீடு
இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து
ஆ: வானத்து அம்புலியை
வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து
வெகுநாளும் வேண்டி நின்றேன்
வானத்து அம்புலியை
வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து
வெகுநாளும் வேண்டி நின்றேன்
எந்தன் தவம் தான் பலிக்க
தெய்வம் வரம் தந்ததம்மா
அம்புலியும் பூமி தன்னில்
உன் உருவில் வந்ததம்மா
வீதி வழி போனால் வெள்ளி ரதம்
தரையில் நடந்தாலே தங்க ரதம்
உன்னை என்னை தெய்வம் இணைத்தது..
பெ: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து
இப்பாடலை பதிவிறக்குவதும்,
மீள்பதிவேற்றம் செய்வதும்
கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!
பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!
பெ: சிறு வீணை தான் எடுத்து
விரலாலே சுதி எழுப்பி
குறுநகையாள் பாடுவதை
குறும்புடனே கேட்டீரோ
சிறு வீணை தான் எடுத்து
விரலாலே சுதி எழுப்பி
குறுநகையாள் பாடுவதை
குறும்புடனே கேட்டீரோ
பாடல் தன்னில் நீ மயங்கி
பைங்கொடி நீ வேண்டும் என்றாய்
குரல் தனிலே நீ கிறங்கி
குலக்கொடியை வேண்டி நின்றாய்
ஈசன் அருள் உனக்கே இருந்தது..
ஏந்திழையின் மனமும் இணைந்தது..
நம்மை அன்பு தானே இணைத்தது..
ஆ: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா
இன்பம் தன்னை தூண்டுதா
அன்புகொள்ள காலம் நேரம் ஏது
அன்புகொள்ள காலம் நேரம் ஏது
பெ: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி..
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி..