பெண்:உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன்சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்தே சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……
ஆண்:உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன்சுவாசம் என் மூச்சில் சேருதே
உபயகுசல சிரஜீவன பிரசுதஹரித மஞ்சுளபர
சித்தாரே சஞ்சாரே அதர ருச்சித மதுரிதபக
சுதனகனக பிரசமநிரத பாங்கல்யே மாங்கல்யே
மமதம சமி சமதசசத முகமனசுத சுபநலஇவ
சுசுத சகித காமம் ஹிரகரகித பாவம்
ஆனந்த போகம் ஆஜீவ காலம்
பாசானு பந்தம் காலானு காலம்
தெய்வானு சூலம் காம்யாச்ச சிஜ்ஜின் காமயே
ஆண்:விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும்
பெண்:முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்
ஆண்:இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே
ஓஹோ…. ஓ… ஓ… ஓஹோ… ஹோ……
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன்சுவாசம் என் மூச்சில் சேருதே
பெண்:ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஆண்:ஓ... ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
பெண்:காலம் முடியலாம் நம் காதல் முடியுமா
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே
ஓ… ஓ……. ஓ…… ஓ…
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன்சுவாசம் என் மூச்சில் சேருதே
ஆண் பெண்:உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்தே சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ…….
ஆண்:உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன்சுவாசம் என் மூச்சில் சேருதே