வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே ஆ ஆ ஆ ஆ ஆ
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே
வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி
வைரங்கள் மின்னுமே
எண்ணமே
தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள்
பேரின்பமே
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே
என்னுயிரே