இசை
பதிவேற்றம்:
பெண்: எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆண்: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெண்: பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
ஆண்: எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
இசை
பதிவேற்றம்:
ஆண்: கண்களின் பார்வை
அம்புகள் போலே
நெஞ்சினிலே பாய்வதுமேன்
அம்புகள் மீண்டும்
பாய்ந்திடும் போது
காயங்களும் ஆறியதேன்
பெண்: ஆறிடும் நெஞ்சம்
தேறிடும் நேரம்
பிரிந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும்
நீங்கிடும் போதும்
மயங்குவதேனோ என் மனது
ஆண்: இரு நெஞ்சின் துன்பம்
இது காதல் தான்
அது போல இன்பம்
எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும்
அன்பே அன்பே..
பெண்: எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆண்: ஆனந்த கீதம் ஆரம்பாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெண்: பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
ஆண்: எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
இசை
பதிவேற்றம்:
பெண்: மாலை நந் நேரம்
மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே
ஆண்: சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்
கடலினில் கூட அலை நிற்கட்டும்
பெண்: உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆண்: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெண்: பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
ஆண்: எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
இருவரும்: லாலால லாலால லா லா
லாலால லாலால லா லா
நன்றி
பதிவேற்றம்: