by
fb: ராஜா முகமது சீன தேசத்திலிருந்து
ரமணா
இசை: இளையராஜா
ஹரிஹரன், சாதனா ஷர்கம்
️ வரிகள்: பழனி பாரதி
வருடம்: 2002
வானவில்லே
வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த
வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்னப் பறவைகள்
கொஞ்சிப் பறக்குதே
பட்டு சிறகிலே
பனி தெளிக்குதே
அடி தாய்த் தென்றலே
வந்து நீ பாடு
ஆராரோ.. ஓ..ஓ..
வானவில்லே
வானவில்லே
வந்ததென்ன இப்போது
எந்த நாட்டு குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூ..க்கூ
எந்த நாட்டு கிளியின் பேச்சிலும்
கொஞ்சும் மழலை உண்டு
ஜாதி என்ன
கேட்டு விட்டு
தென்றல் நம்மை தொடுமா
தேசம் எது
பார்த்து விட்டு
மண்ணில் மழை வருமா
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே
வானவில்லே
வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த
வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு
எங்கிருந்து சொந்தம் வந்ததோ
நெஞ்சம் வேடந்தாங்கல்
இந்த கூட்டில் நானும் வாழவே
கேட்க வேண்டும் நீங்கள்
தாய் பறவை
சேய்களுக்கு
ஊட்டுகின்ற உறவு
அதில்தானே
வாழ்கிறது
உயிர்களின் அழகு
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே
வானவில்லே
வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்னப் பறவைகள்
கொஞ்சிப் பறக்குதே
பட்டு சிறகிலே
பனி தெளிக்குதே
அடி தாய்த் தென்றலே
வந்து நீ பாடு
ஆராரோ.. ஓ..ஓ..
வானவில்லே
வானவில்லே
வந்ததென்ன இப்போது
ம்ஹூஹ்ஹூம்ம்
ம்ஹூஹ்ஹூம்ம்
லலலல்ல லல்லாலா
இணைந்தமைக்கு நன்றி
தமிழுக்கு தொடரவும்