M:இன்பமே...
உந்தன் பேர் பெண்மையோ
இன்பமே..
உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி
F:இன்பமே
உந்தன் பேர் வள்ளலோ
இன்பமே
உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக் கனி
நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி
இன்பமே
உந்தன் பேர் வள்ளலோ
F:சர்க்கரைப் பந்தல் நான்
தேன்மழை சிந்த வா
சர்க்கரைப் பந்தல் நான்
தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே
சாகச நாடகம் எங்கே
M:தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
M:இன்பமே....
உந்தன் பேர் பெண்மையோ
M:பஞ்சணை வேண்டுமோ
நெஞ்சணை போதுமே
பஞ்சணை வேண்டுமோ
நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
F:பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன
F:இன்பமே
உந்தன் பேர் வள்ளலோ
F:மல்லிகைத் தோட்டமோ
வெண்பனிக் கூட்டமோ
மல்லிகைத் தோட்டமோ
வெண்பனிக் கூட்டமோ
M :மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாடும்
F:மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
M:மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில் ஆடும்
M:இன்பமே...
உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி
F:இன்பமே...உந்தன் பேர் வள்ளலோ