படம் : வான்மதி
பாடியவர்கள்:எஸ்.பி.பி சித்ரா
இசை: தேனிசைத் தென்றல் தேவா
ஆ: வைகரையில் வந்ததென்ன வான்மதி..
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி..
வைகரையில் வந்ததென்ன வான்மதி..
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி..
பெ: நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மலைச்சாரல் வீச வேண்டும்
ஆ: இதுபோல் தொடரும்
இந்த காதல்கதை
காலமுள்ள
காலம் வரை
பெ: வைகரையில் வந்ததென்ன வான்மதி..
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி..
இப்பாடலை பதிவிறக்குவதும்,
மீள்பதிவேற்றம் செய்வதும்
கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!
பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!
ஆ: இதுதான்
கோ: பருவம் தினம் பயிலும்
இதழ் உரசும் இந்த சரசம்
பெ: இதமா
கோ: தழுவும் இந்த தருணம்
வந்த விரகம் மெல்ல விலகும்
ஆ: முத்தங்கள் ஒவ்வொன்றும்
முத்துப்போல் பதிக்க
பெ: கன்னங்கள் ஒவ்வொன்றும்
கிண்ணங்கள் வடிக்க
ஆ: ஹொய் பக்கம் வரும்போது
அள்ளிக் கொடு பத்துப்படித்தேனே
பெ: தொட்டுத் தழுவாது
அந்திப்பகல் பித்துப் பிடித்தேனே
ஆ: உன்னை நான்தொட
என்னை நீ தொட
எதிர்பார்த்திருந்தாயோ
பெ: வைகரையில் வந்ததென்ன வான்மதி..
ஆ: கைவளையல் ஓசையிலும் தேன்மொழி..ஈ..
பெ: ஆ ஆ ஆஹ ஆ ஆ
ஆ ஆ ஆஹ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ: பலநாள்
கோ: இரவில் பனி நிலவில்
இவள் இளைத்தாள்
உந்தன் நினைவில்
பெ: அடடா …
கோ: எதுவோ ஒரு சபலம்
ஒரு சலனம் சில சமயம்
ஆ: ஒட்டிக்கொள் கட்டிக்கொள்
உன்னை நான் கல..க்க
பெ: அம்மம்மா அச்சம்தான்
என்னென்று விளக்க
ஆ: பள்ளியறைப்பாட்டின் பல்லவியை
சொல்லித்தரலாமா..
பெ: ஓ..சொல்லித்தரும்போது
சின்ன இடை துன்பப்படலாமா
ஆ: மிச்ச மீதியும் மத்த சேதியும்
முதல் ராத்திரி தானா..
பெ: வைகரையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
ஆ: வைகரையில் வந்ததென்ன வா .. ன்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
பெ: நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மலைச்சாரல் வீச வேண்டும்
ஆ: இதுபோல் தொடரும்
இந்த காதல்கதை
காலமுள்ள
காலம் வரை
பெ: வைகரையில்.. வந்ததென்ன.. வான்மதி
ஆ: கைவளையல்.. ஓசையிலும்.. தேன்மொழி.ஈ ஈ ஈ