ஆண்: தாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
ஆண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே....
பெண்: முத்துமணியே பட்டுத்துணியே..
ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே
ஆண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..
பெண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே....
ஆண்: கூவாத குயில் ஆடாத மயில்
நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை
நீ சேரத் தெளிந்தேனே
பெண்: ஆதாரம் அந்த தேவன் ஆணை
சேர்ந்தாய் இந்த மானை..
ஆண்: நாவார ருசித்தேனே தேனை
தேர்ந்தேன் இன்று நானே..
பெண்: வந்தத் துணையே வந்து அணையே..
ஆண்:அந்த முல்ல சந்திரனை
சொந்தம் கொண்ட சுந்தரியே
பெண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..
ஆண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே..
பெண்: முத்துமணியே பட்டுத்துணியே
ஆண்: ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே
பெண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
ஆண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே....
பெண் : காவேரி அணை மேலேறி நதி
ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும் விதி
மாறாத இறை வேதம்
ஆண் : பூலோகம் இங்கு வானம் போலே
மாறும் நிலை பார்த்தேன்..
பெண் : வாழ்நாளின் சுகம் தான் இது போலே
வாழும் வழி கேட்டேன்..
ஆண் : வண்ணக் கனவே வட்ட நிலவே
பெண் : என்ன என்ன இன்பம் தரும்
வண்ணம் கொண்ட கற்பனையே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..
பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே..
ஆண் : முத்துமணியே பட்டுத்துணியே
பெண் : ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே
ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..
பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே....