பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : பாலா பாரதி
ஆண்: தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே
பெண்: காடு மலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே
ஆண் : இந்த பந்தம்
இன்று வந்ததோ
பெண் : ஏழு ஜென்மம்
கண்டு வந்ததோ
ஆண் : உலகம் முடிந்தும்
தொடரும் உறவிதுவோ
பெண் : தாஜ்மகால் தேவையில்லை
ஆண் : அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே
ஆண் : பூலோகம் என்பது
பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ
பூலோகம் தாண்டி வாழலாம்
பெண் : ஆகாயம் என்பது
இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே
ஆகாயம் தாண்டி வாழலாம்
ஆண் : கண்ணீரில் ஈரமாகிக்
கறையாச்சுக் காதலே
பெண் : கறை மாற்றி நாமும்
மெல்ல கரையேற வேண்டுமே
ஆண் : நாளை வரும்
காலம் நம்மை
கொண்டாடுமே
பெண் : தாஜ்மகால் தேவையில்லை
ஆண் : அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே
பெண் : சில்வண்டு என்பது
சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால்
செடி என்ன கேள்வி கேட்குமா
ஆண் : வண்டாடும் காதலைக்
கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால்
அது ரொம்ப பாவமென்பதா
பெண் : வாழாத காதல் ஜோடி
இம்மண்ணில் கோடியே
ஆண் : வாழாத பேர்க்கும் சேர்த்து
வாழ்வோமே தோழியே
பெண் : வானும் மண்ணும்
பாடல் சொல்லும் நம் பேரிலே
ஆண் : தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே
பெண் : காடு மலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே
ஆண் : இந்த பந்தம்
இன்று வந்ததோ
பெண் : ஏழு ஜென்மம்
கண்டு வந்ததோ
ஆண் : உலகம் முடிந்தும்
தொடரும் உறவிதுவோ
பெண் : தாஜ்மகால் தேவையில்லை
ஆண் : அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே