ஆண் : நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா
உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா
பெண் : நடந்தா தென்மதுரை பாண்டியன் போல
நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை
ஆண் : நன்றி கெட்ட சேலை
அது வேணா விட்டுருடி
கண்ணே உந்தன் சேலை
இனி நான்தான் கட்டிக்கடி
பெண் : எட்டி நில்லு சாமி
நீ தொட்ட ஒட்டிகுவே...
தொட்டில் ஒன்னு போடா
ஒரு தோது பண்ணிக்குவே...
ஆண் : இப்போதே அம்மாவா நீ ஆனா
என் பாடு என்னாகும் ஆ..மா...
பெண் : வாசக் கருவேப்பில்லையே
என் அத்தை பெத்த மன்னவனே
ஆண் : ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல
உதடே முள்முருங்க பூத்தது போல
பெண் : கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்
கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம்
ஆண் : எந்த பொண்ணு கையும்
என்னை இன்னும் தொட்டதில்ல
இன்று மட்டும் கண்ணே
நம்ம கற்பும் கெட்டதில்ல
பெண் : கற்பு உள்ள ராசா
நான் உன்ன மெச்சிக்குறேன்
கட்டிகையா தாலி
உன்ன நல்ல வச்சுகிறேன்
ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்
கையோடு கை சேர்த்து போவோம்
பெண் : வாசக் கருவேப்பில்லையே
என் அத்தை பெத்த மன்னவனே
ஆண் : வாசக் கருவேப்பில்லையே
என் மாமன் பெத்த மல்லிகையே
பெண் : ஊதக்குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு
ஆண் : ஊதக்குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு
பெண் : வாசக் கருவேப்பில்லையே….
என் அத்தை பெத்த மன்னவனே……