M; ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்
F:உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
M: முதல் முதல் தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
வா வா எந்தன் வாழ்வே
M: ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்
F: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
F:பார்வை மீது உந்தன் பேரழகே
மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி
M:நேரில் ஆடி வரும் தேன் அருவி
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி
F: கோடையிலும் இதழ் காய்வதில்லை
ஆசையின் அலை தான் ஓய்வதில்லை
M: காதல் கதை என்றும் தோற்றதில்லை
தேவனின் விதியில் மாற்றம் இல்லை
F: நாள் முழுக்க உந்தன் ஞாபகம் தான்
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம் தான்
M: ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்
F: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
M: போடவேண்டும் ஒரு பூ விலங்கை
இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை
F: ஏற்றவேண்டும் சின்ன பூ திரியை
அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை
M: தாமரையே சிறு வான்பிரையே...F: ம்...
மார்பினில் வழியும் தேன் மழையே
F: காதலனே இசை பாடகனே
கீதங்கள் பொழியும் பாவலனே
M: நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
குளிர் நீர் இல்லையே
துள்ளும் மீன் இல்லையே
M: ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு... கேள்வி கேட்டா முல்லைபேசும்
F: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம்... காட்டும்
M: முதல் முதல் தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
M&F: வா வா... எந்தன் வாழ்வே
M: ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை...பேசும்
F: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்