
Kaadhalaa Kaadhalaa
பெ: காதலா காதலா
காதலின் சாரலா
காதலா காதலா
காதலின் சாரலா
தீயிலே தென்றலாய்
வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா
கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்
ஆ: காதலா காதலா
காதலின் சாரலா
பெ: இதயத் துடிப்பினில்
ஓசையில்லை எடுத்துச்
சொல்லவும் பாஷையில்லை
ஆ: இதற்குமுன்
இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள்
வீசவில்லை
பெ: தனிமையில் இன்று
நான் நகம் கடித்தேன்
அடிக்கடி என்னை
நான் தினம் ரசித்தேன்
ஆ: கனவினில் உன்னை
நான் படம்பிடித்தேன்
தலையணையோடு
நான் அடம்பிடித்தேன்
பெ: ஏனிந்த மாற்றமோ?
ஆ: காதலா காதலா
காதலின் சாரலா
ஆ: பெருகிப் பெருகி
ஒரு அலையானேன்
உருகி உருகி
பனித் துளியானேன்
பெ: பறந்து பறந்து
ஒரு சிறகானேன்
நனைந்து நனைந்து
புல்வெளியானேன்
ஆ: பூமியும் இங்கு பின்
சுழல்வதென்ன வானவில்
ஒன்று என்னை வளைப்பதென்ன?
பெ: மலர்களெல்லாம்
பொன் முடைப்பதென்ன
ரகசியம் சொல்லு
என்னை ரசிப்பதென்ன?
ஆ: ஏனிந்த மாற்றமோ?
காதலா காதலா
காதலின் சாரலா
பெ: தீயிலே தென்றலாய்
வாழ்கிறேன் காதலா
ஆ: கண்களா தூண்டிலா
கண்களா தூண்டிலா
பெ: மாறினேன் மீன்களாய்
ஆ: காதலா காதலா
காதலின் சாரலா
பெ: ம் ம் ம் ...ம் ம் ம்