சக்கரை நிலவே
பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை
ஏன் இல்லை
நீ இல்லையே
சக்கரை நிலவே
பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை
ஏன் இல்லை
நீ இல்லையே
மனம் பச்சைத் தண்ணி தான் பெண்ணே
அதைப் பற்ற வைத்ததுன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
சக்கரை நிலவே
பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை
ஏன் இல்லை
நீ இல்லையே
ஓ..
தனனனா
ஹே தனனனா
ஓ.. ஓ.. ஓ..
நனனனா
ஹே நனனனா
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் புன்னகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்து கொண்டது என் தவறா
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா