menu-iconlogo
logo

Paartha Mudhal Naalae

logo
Paroles
பார்த்த முதல் நாளே உன்னைப்

பார்த்த முதல் நாளே

காட்சிப் பிழை போலே

உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்

என்பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்

என்றும் மறையாதே

காட்டிக் கொடுக்கிறதே

கண்ணே காட்டிக் கொடுக்கிறதே

காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை

பார்த்தே கடந்தேன் பகலிரவை

உன் அலாதி அன்பினில்

நனைந்த பின் நனைந்த பின்

நானும் மழையானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்

தேடிப் பிடிப்பதுந்தன் முகமே

தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி

காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே

எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்

நீயறிந்து நடப்பதை வியப்பேன்

உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்

நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்

விடை பெற்றும் போகாமல் இருப்பாய்

சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

காட்டிக் கொடுக்கிறதே

கண்ணே காட்டிக் கொடுக்கிறதே

காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்

உன் அலாதி அன்பினில்

நனைந்த பின் நனைந்த பின்

நானும் மழையானேன்

Paartha Mudhal Naalae par Harris Jayaraj - Paroles et Couvertures