menu-iconlogo
logo

Aagaya Thamarai

logo
Paroles
படம்: நாடோடி பாட்டுக்காரன்

பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி

இசை: இளையராஜா

இது ஒரு CeylonRadio வெளியீடு

ஆ: ஆகா..ய தாமரை.. அருகில் வந்ததே..

நாடோடி பாடலில்.. உருகி நின்றதே..

ஆகா..ய தாமரை அருகில் வந்ததே

நாடோடி பாடலில் உருகி நின்றதே

காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே..

பெ: ஆகா..ய தாமரை.. அருகில் வந்ததே..

நாடோடி பாடலில் உருகி நின்றதே..

காவல் தனை தாண்டியே..

காதல் துணை வேண்டியே..

ஆ: ஆகா..ய தாமரை... அருகில் வந்ததே

இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

ஆ: மெல்லிசைப் பாட்டு முழங்கிட கேட்டு

இதயமே இளகுதா இள மயிலே

பெ: நீ மந்திரம் போலே மணி தமிழாலே

இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே..

ஆ: ஒரு மட மாது இணை பிரியாது

இருக்குமோ மறக்குமோ..

பெ: ஒரு பொழுதென்னும் அருவியை மீனும்

பிரியுமோ விலகுமோ..

ஆ: என்று இந்த லீலை எல்லாம்

எல்லை தாண்டி போவது..

பெ: கைகள் ஏந்தும் வேளையெல்லாம்

கண்ணிப்போகும் பூவிது

ஆ: முத்தம் தலைவன் இதழ் பதித்திட

இதயம் தித்தித்திட

புதிய மது ரசம் வழிந்திட

பெ: ஆகா..ய தாமரை அருகில் வந்ததே

ஆ: நாடோ..டி பாடலில் உருகி நின்றதே

இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து

பாடலை பாடி Save

செய்யும்போது வழங்குவது,

பதிவேற்றியவருக்கு ஊக்கமளிப்பது

மட்டுமல்ல, பாடல் தேடு

பொறியில் முன்னே வரவும்,

பலரை சென்று அடையவும் உதவும்.

பாடலில் பிழை இருப்பின் பதிவேற்றியவரிடம்

inbo இல் சொல்லுங்கள். நன்றி!

ஆ: புன்னகை முல்லை புது விழி குவளை

அழகிய.. அதரங்கள் அரவிந்த பூவோ

உன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அல்லி

நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூவோ

செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு

எனக்கென பிறந்ததோ..

குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே

குமரியாய் விளைந்ததோ..

பெ: மின்னும் வண்ண பூக்கள் எல்லாம்

மாலை என்று ஆகலா..ம்

மன்னன் தந்த மாலை எந்தன்

நெஞ்சைத் தொட்டு ஆடலாம்

நெஞ்சை தழுவியது துலங்கிட

உறவு விளங்கிட

இனிய கவிதைகள் புனைந்திட

ஆ: ஆகா..ய தாமரை அருகில் வந்ததே

பெ: நா..டோடி பாடலில் உருகி நின்றதே

ஆ: காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே

பெ: ஆகா...ய தாமரை அருகில் வந்ததே

( on 23rd December 2018 )