menu-iconlogo
logo

Onakkaaga Poranthaenae (From "Pannaiyaarum Padminiyum")

logo
Paroles
உனக்காக பொறந்தேனே எனதழகா

பிரியாம இருப்பேனே பகல் இரவா

உனக்காக பொறந்தேனே எனதழகா

பிரியாம இருப்பேனே பகல் இரவா

உனக்கு வாக்கப்பட்டு

வருஷங்க போனா என்ன

போகாது உன்னோட பாசம்

என் உச்சி முதல் பாதம் வரை

என் புருஷன் ஆட்சி

ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த

முத்தாலம்மன் சாட்சி

எனக்காக பொறந்தாயே எனதழகி

இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி

ஒருவாட்டி என உரசாட்டி

உன்ன உறுத்தும் பஞ்சணை

மெத்தையும் ராத்திரி பூத்திரி

ஏத்துற வேளையில

கருவாட்டு பான கெடச்சாக்க பூன

விடுமா சொல்லடி சுந்தரி

நெத்திலி வத்தலு வீசுற வாடையில

பூவாட்டம் உட்காந்து

மாவாட்டும் நேரம்தான்

உன் கைய நீட்டாத

முந்தானை ஓரம்தான்

பூவாடை தூக்காதா பூபாளம் தாக்காதா

நீ முத்தி போன கத்திரியா

புத்தம்புது பிஞ்சி

நான் முந்தாநாளு ஆளானதா

என்னுது உன் நெஞ்சு

உனக்காக பொறந்தேனே எனதழகா

பிரியாம இருப்பேனே பகல் இரவா

ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு

உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சுல

பச்சைய குத்தி வச்சேன்

இதுதான்டி ரதம்

இதுலதான் நெதம்

உன்னதான் உட்கார வச்சி நான்

ராசாத்தி ராசா நான்

ஊர்கோலம் வந்திடுவேன்

உன்னோடு நான் சேர

தின்னேனே மண் சோறு

நேந்துதான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு

ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு

நாத்தாடும் நான் காத்தாட்டமா

நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும்

நீ மாலை இடும் வேலை எது

கேட்குது என் தோளு

உனக்காக பொறந்தேனே எனதழகா

பிரியமா இருப்பேனே பகல் இரவா

உனக்கு மாலையிட்டு

வருஷங்க போனா என்ன

போகாது உன்னோட பாசம்