menu-iconlogo
logo

Thoongatha Vizhigal

logo
Paroles
பெ: தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

செம்பூ மஞ்சம் விரித்தாலும்

பன்னீரைத் தெளித்தாலும்

ஆனந்தம் எனக்கேது

அன்பே நீ இல்லாது...

தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

ஆ: மாமர இலை மேலே ஆ...ஆ...ஆ...ஆ....

மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே

பூமகள் மடி மீது நான் தூங்கவோ

மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே

பூமகள் மடி மீது நான் தூங்கவோ,

பெ: ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்

ராஜனை கையேந்தி தாலாட்டவோ,

ஆ: நாளும் நாளும் ராகம் தாளம்

சேறும் நேரம் தீரும் பாரம்....

பெ: ஆ....ஆ...ஆ..

ஆ: தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

செம்பூ மஞ்சம் விரித்தாலும்

பன்னீரைத் தெளித்தாலும்

ஆனந்தம் எனக்கேது

அன்பே நீ இல்லாது...

தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

பெ: ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக

நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ

ஆ: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்

காதலில் அரங்கேரும் கதை அல்லவோ

பெ: மாதுளம் கனியாட மலராட கொடியாட

மாருதம் உறவாடும் கலை என்னவோ

ஆ: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற

வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ,

பெ: மேலும் மேலும் மோகம் கூடும்

\ஆ: தேகம் யாவும் கீதம் பாடும்...

பெ: ஆ...ஆ....ஆ....ஆ....

ஆ: ஆ....ஆ....ஆ....ஆ....

பெ: தூங்காத விழிகள் ரெண்டு

ஆ: உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

பெ: செம்பூ மஞ்சம் விரித்தாலும்

பன்னீரைத் தெளித்தாலும்,

ஆ: ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது...

இருவரும்: தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

Thoongatha Vizhigal par Kintani/Spb/janaki - Paroles et Couvertures