பெ: தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது...
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
ஆ: மாமர இலை மேலே ஆ...ஆ...ஆ...ஆ....
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ,
பெ: ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ,
ஆ: நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்....
பெ: ஆ....ஆ...ஆ..
ஆ: தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது...
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெ: ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆ: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
பெ: மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
ஆ: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ,
பெ: மேலும் மேலும் மோகம் கூடும்
\ஆ: தேகம் யாவும் கீதம் பாடும்...
பெ: ஆ...ஆ....ஆ....ஆ....
ஆ: ஆ....ஆ....ஆ....ஆ....
பெ: தூங்காத விழிகள் ரெண்டு
ஆ: உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெ: செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்,
ஆ: ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது...
இருவரும்: தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று