அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னை சேர்த்தேன்
அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னை சேர்த்தேன்
விழி நீங்கிடாமல்
நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல்
வாடும் இந்த அன்பிலே ஹோய்
லலலலா லலலலா லாலா
லலலலா லலலலா லாலா
முல்லைப்பூவை மோதும்
வெண் சங்குப்போல ஊதும்
காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு
வீணைப்போல உன்னை
கைமீட்டும் இந்த வேளை
நூறு ராகம் சேர்க்கும்
நோயை கூட தீர்க்கும்
பாதி பாதியாக
சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றி தந்தாள்
எனை ஏற்றுக்கொண்ட மாது
தேவியை மேவிய
தேவனே நீதான்
நீதரும் காதலில்
வாழ்பவள் நான் தான்
நீயில்லாமல் நானும் இல்லையே….
அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னை சேர்த்தேன்
விழி நீங்கிடாமல்
நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல்
வாடும் இந்த அன்பிலே ஹோய்
அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்
மாலை ஒன்று சூடும்
பொன் மேனியாகும் சூடு
மாதம் தேதி பார்த்து
மனது சொல்லி கேட்டு
வேளை வந்து சேறும்
நம் விரகம் அன்று தீரும்
நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்
காடு மேடு ஓடி
நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அணலில் வெந்து வாடும்
வாடலும் கூடலும்
மன்மதன் வேளை
வாழ்வது காதல் தான்
பார்க்கலாம் நாளை
பூர்வ ஜென்ம பந்தமல்லவோ….
அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னை சேர்த்தேன்
விழி நீங்கிடாமல்
நீந்துகின்ற தென்றலே ஹோய்
உன்னைச் சேர்ந்திடாமல்
வாடும் இந்த அன்பிலே ஹோய்
லலலலா லலலலா லாலா
லலலலா லலலலா லாலா