menu-iconlogo
logo

NENJAM ORU MURAI

logo
Paroles
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,

கண்கள் ஒரு நொடி பார் என்றது ,

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,

கண்கள் ஒரு நொடி பார் என்றது ,

ரெண்டு கரங்கலும் சேர் என்றது ,

உள்ளம் உனக்குத்தான் என்றது ,

சத்தமின்றி உதடுகளோ முத்தம்

எனக்கு தா என்றது ,

உள்ளம் என்ற கதவுகளோ

உள்ளே உன்னை வா என்றது ,

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து ,

உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்,

நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து ,

நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம் ,

கன்னம் என்னும் தீ அணைப்பு

துறையில் , (சாப்போ !)

உன் முத்தம்தானே பற்றி கொண்ட

முதல் தீ , (ஷப்போபோ !)

கிள்ளும்போது எந்தன் கையில்

கிடைத்த , (சாப்போ !)

உன் விரல்தானே நானும் தொட்ட

முதல் பூ , (ஷப்போபோ !)

உன் பார்வைதானே எந்தன்

நெஞ்சில் முதல் சரணம் ,

அன்பே , என்றும் நீ அல்லவா ,

கண்ணால் பேசும் முதல் கவிதை ,

காலமுள்ள காலம் வரை , நீதான்

எந்தன் முதல் குழந்தை ,

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,

கண்கள் ஒரு நொடி பார் என்றது

காதல் என்றால் அது பூவின் வடிவம் ,

ஆனால் உள்ளே அது தீயின் உருவம் ,

காதல் வந்தால் இந்த பூமி நழுவும் ,

பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பரவும் ,

காதல் வந்து நெஞ்சுக்குள்ளே

நுழையும் , (சாப்போ !)

ஒரு தப்ப வெப்ப மாற்றங்களும்

நிகழும் , (ஷப்பப்போ !)

காதல் வந்து கண்ணை தொட்டு

எழுப்பும் , (சாப்போ !)

அது ஊசி ஒன்னை உள்ளுக்குள்ளே

அனுப்பும் , (ஷப்பப்போ !)

இந்த காதல் வந்தால் இல்லை

கூட மலை சுமக்கும் ,

காதல் என்ற வார்த்தையிலே ,

ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம் ,

காதல் என்ற காற்றினிலே ,

தூசி போல நாம் அலைவோம் ,

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,

கண்கள் ஒரு நொடி பார் என்றது ,,

ரெண்டு கரங்கலும் சேர் என்றது ,

உள்ளம் உனக்குத்தான் என்றது ,

சத்தமின்றி உதடுகளோ முத்தம்

எனக்கு தா என்றது ,

உள்ளம் என்ற கதவுகளோ

உள்ளே உன்னை வா என்றது ,