பெண் : வா வா வா வா..
கண்ணா வா...
பாடல் : வா வா வா கண்ணா வா
இசை : இளையராஜா
பெண் : வா வா வா வா
கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறு
கதை நான் இனிமையில்
தொட தொட தொடர்கதை
தான் தனிமையில்
பெண் : உனக்கொரு சிறுகதை நா..ன்
தொடத் தொட தொடர்கதை தா..ன்
உருகி உருகி இதை படித்திட
வா வா வா வா கண்ணா வா
வா வா வா...
ஆண் : வானில் காணும் வானவில்லின்
வண்ணம் ஏழு வண்ணமோ
தோகை உந்தன் தேகம் சூட
மேகமாலை பின்னுமோ
பெண் : காணும் இந்த பூக்கள் மேலே
காயம்.என்ன காயமோ
காற்சலங்கையோடு வண்டு
பாடிச் சென்ற மாயமோ
ஆண் : நூறு நூறு தீபமாய்
வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய்
ஆகும் எங்கள் யாத்திரை
பெண் : நாளு கண்கள் பாதை போட
நாகரீகம் தொடர்ந்தது
பெண் : வா வா வா வா
கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
ஆண் : எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ...
தொடத் தொட தொடர்கதை நீ..
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா வா அன்பே வா
வா வா வா...
பெண் : ஆசையோடு பேச வேண்டும்
ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும்
தஞ்சம் இந்த நெஞ்சமே
ஆண் : ஆசை கொண்ட தேகம் ரெண்டு
நீதிமன்றம் போகுமே
பேசத் தேவை இல்லை என்றே
அங்கு தீர்ப்பு ஆகுமே
பெண் : ராக வீணை போலவே
நானும் வந்து போகவோ
தேகம் வீணை ஆகவே
தேவ கீதம் பாடவோ
ஆண் : நானும் நீயும் காதல் கைதி
எண்ண.எண்ண இனிக்குது
ஆண் : வா வா வா வா அன்பே வா
தா தா தா அமுதம் தா
குழு : ஆஹா
ஆண் : காளிதாசன் காண வேண்டும்
காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு
சீதை என்று துள்ளுவான்
பெண் : ஷாஜகானை பார்த்ததில்லை
நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று
பாடும் பாடல் கேட்கிறேன்
ஆண் : தாஜ்மஹாலின் காதிலே
ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில்
மதங்கள் ஒன்று சேரலாம்
பெண் : பாதி நீயும் பாதி நானும்
ஜோதியாக இணைந்திட
பெண் : வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
ஆண் : எனக்கொரு சிறுகதை நீ
பெண் : இனிமையில்
ஆண் : தொடத் தொட தொடர்கதை நீ
பெண் : தனிமையில்
ஆண் : எனக்கொரு சிறுகதை நீ
பெண் : ஆஆ …
ஆண் : தொடத் தொட தொடர்கதை நீ
பெண் : ஆஆ …
ஆண் : உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா வா அன்பே வா
ஆ பெ : வா வா வா ….
பாடல் பதிவேற்றம் பிடித்திருந்தால்