பெண் : கட்டுமரத் தோணி போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ ஓஒ…..ஓஒ……
பெண் : பட்டுடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசை இல்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஓஒ…..ஓஒ……
ஆண் : பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு
தூங்காத விருந்து
பெண் : நாளும் உண்டல்லோ
அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும்
பாடும் பாட்டல்லோ ஹோ
ஆண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்….
பெண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்