menu-iconlogo
logo

Kannamma

logo
Paroles
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே

துள்ளிக்குதித்ததுதான்

எங்கெங்கும் செல்லுமே

ஒளி வீசும் மனி தீபம்

அது யாரோ நீயே

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி

செல்லங்கொஞ்சக் கோழை கூட ஆகிடாதோ மார்கழி

பால் நிலா உன் கையிலே

சோறாகிப் போகுதே

வானவில் நீ சூடிட மேலாடையாகுதே

கண்ணம்மா…… கண்ணம்மா……

நில்லம்மா… ஆ… ஆ… ஆ…

உன்னை உள்ளம் என்னுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னுடைய கோலம் காண

கோயில் நீங்கும் சாமியே

மண்ணலந்த பாதம் காண சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்

தேவதை நீ தான் என வாயாரப்போற்றுவான்

கண்ணம்மா……… கண்ணம்மா……

என்னம்மா வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே

துள்ளிக்குதித்ததுதான்

எங்கெங்கும் செல்லுமே

ஒளி வீசும் மனி தீபம்

அது யாரோ நீயே