இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கவிஞ்சர் கண்ணதாசன்
பெண் அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ
ஆண்அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ
என்னுயிரும் நீ அல்லவோ
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே...
பெண் : ஓ ஒ ஓ....
ஓ ஒ ஓ....
பெண்கன்னிக் காய் ஆசைக் காய்
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக் காய்..
பெண் கன்னிக் காய் ஆசைக் காய்
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக் காய்
ஆண் மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ..
பெண் இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ..
பெண் ஓஒஓஒ ஓஓ ஓ...
ஆஅஆஅ ஆஆ ஆ...
ஆண்இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்..
ஆண் இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்..
பெண் உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
இருவர்: அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ..
இருவர் ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
பெண் ஏலக் காய் வாசனை போல்
எங்கள் உள்ளம் வாழக் காய்
சாதிக் காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக் காய்..
பெண் ஏலக் காய் வாசனை போல்
எங்கள் உள்ளம் வாழக் காய்
சாதிக் காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக் காய்
ஆண்சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
இருவர்: அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ..
இருவர்: ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆண் உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக் காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரித்தாயோ..
ஆண் உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக் காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரித்தாயோ
பெண் கோதை என்னை காயாதே
கொற்றவரங்காய் வெண்ணிலா
ஆண்இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா
நால்வரும்: அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ
ஆஹாஹா.. ஆ ஆ
ஓஹோஹோ.. ஹோ ஹோ
ம்ஹும் ஹும்...