menu-iconlogo
logo

Mayanginen Solla Thayanginen

logo
Paroles

உறக்கம் இல்லாமல் அன்பே

நான் ஏங்கும் ஏக்கம் போதும்

இரக்கம் இல்லாமல் என்னை

நீ வாட்டலாமோ நாளும்?

வாடை காலமும் நீ வந்தால் வசந்தம் ஆகலாம்

கொதித்திருக்கும் கோடை காலமும்

நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

என்னாளும் தனிமையே எனது நிலமையோ

வந்த கவிதையோ கதையோ

இரு கண்ணும் என் நெஞ்சும்

இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெற தவிக்குதே மனமே

இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெற தவிக்குதே மனமே

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்

உயிர் பிரிந்தாலும் அன்பே

உன் மார்பில் சாயணும்

மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ

மணவறையில் நீயும் நானும் தான்

பூச்சூடும் நாளும் தோன்றுமோ

பொன் ராகம் பொழுது தான் இனிய பொழுது தான்

உந்தன் உறவு தான் உறவு

அந்த நாளை எண்ணி நானும்

அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெற தவிக்குதே மனமே

இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெற தவிக்குதே